| 
Reg. No.
    105/2005 | 
திருமலைவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
66வது குடியரசு தின விழா - அழைப்பிதழ்
66th REPUBLIC DAY CELEBRATIONS -
INVITATION
| 
அன்புடையீர் வணக்கம், 
      வரும் 26.01.2015 திங்களன்று
  நமது நகரில் 66வது குடியரசு  
தின கொடியேற்று விழா, விளையாட்டுப்
  போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பூங்கா  அருகே   மிகச்சிறப்பாக நடைபெற  
உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் 
தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு  
கேட்டுக் கொள்கிறோம்.  டாக்டர் எம்.மாணிக்கசாமி,
  முதல்வர், கேந்திரிய வித்யாலயம், HVF அவர்கள்
  கலைநிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இசைந்துள்ளார் என்பதை
  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
Dear members of TNRWA, 
66th Republic Day
  flag hoisting, Games & cultural programmes will be conducted in our Nagar on Monday,
  the 26th Jan 2015 [Near Park] in a festive trend.  All
  the members are requested to attend the celebrations with family and make the
  occasion a grand success.  
Dr. M. Manickasamy, Principal, KV HVF has kindly
  accepted to grace the cultural programme session as Chief Guest. 
நிகழ்ச்சி நிரல் / PROGRAMME 
காலை 7.15 மணிக்கு - கொடியேற்று விழா 
காலை 8 மணி முதல்  - விளையாட்டு நிகழ்ச்சிகள் 
மாலை 5 மணிக்கு  
கலைநிகழ்சிகள்
  மற்றும் பரிசளிப்பு விழா | 
AT 7:15 A.M. – FLAG
HOISTING
FROM 8 A.M. ONWARDS
– GAMES
FROM 5 P.M. ONWARDS
– CULTURAL PROGRAMMES 
FOLLOWED BY PRIZE DISTRIBUTION
| 
குடியரசு தின விழா
  2015 நிகழ்ச்சி நிரல்  
 REPUBLIC DAY 2015 CELEBRATIONS …. PROGRAMME | 
| 
 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிப்பு / NOTE:  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஏதுவாக
நமது நகரில் முதன்முறையாக மேடை அமைக்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 WE ARE DELIGHTED TO INFORM OUR MEMBERS THAT A STAGE WILL
BE MADE AVAILABLE TO ENABLE THE PARTICIPANTS EXHIBITING THEIR TALENTS IN THE
CULTURAL PROGRAMME SESSION.  
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
REASON BEHIND CELEBRATION
OF REPUBLIC DAY
1929 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம்
லாகூரில் கூடிய
அகில இந்திய
காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத்
தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான
சுதந்திரம் என்பது
பொருள்) என்பதே
நமது நாட்டின் உடனடியான
லட்சியம், என்ற
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்
பிறகு, காந்தியால் இந்தியத்
தன்னாட்சிக்கான சாற்றல்
உருவாக்கப்பட்டது. அதன்
அடிப்படையில் 1930 ஆம்
ஆண்டு ஜனவரி
26 ஆம் நாள்
முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட
வேண்டும் எனக்
கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்:  1946 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம்
9 ஆம் நாள்
காங்கிரஸ் கட்சியால் இந்திய
அரசியல் நிர்ணய
சபை கூட்டப்பட்டு, அதன்
தற்காலிகத் தலைவராக
சச்சிதானந்த சின்கா
என்பவரை நியமித்தது. ஆகஸ்ட்
15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,
 இந்திய
அரசியல் நிர்ணய
சபைத் தலைவராக
டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்
நியமிக்கப்பட்டார். அவரே
விடுதலை இந்தியாவின் முதல்
குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு,
இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு
அமைக்கப்பட்டு, டாக்டர்
பி. ஆர்.
அம்பேத்கர் தலைமையில் இந்திய
அரசியல் அமைப்பு
சாசன் எழுதப்பட்டது. முகவுரை,
விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை,
திருத்த மசோதாக்கள் போன்ற
சிறப்பு அம்சங்களைக் கொண்டு
நீண்ட ஆவணமாக
எழுதப்பட்ட இந்த
சாசனம், இந்திய
அரசியல் நிர்ணய
சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக்
குறிக்கோளாகக் கொண்டு
நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம்
நாளை நினைவுகூரும் வகையில்
1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு
வருடமும் ஜனவரி
26 ஆம் நாளை
இந்திய தேசிய
குடியரசு தினமாக
நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்:  குடியரசு என்பதன்
பொருள் “மக்களாட்சி” ஆகும்.
அதாவது, தேர்தல்
மூலம் மக்கள்
விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும்
முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.
“மக்களுக்காக, மக்களுடைய
மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு
என்ற வார்த்தைக்கு இலக்கணம்
வகுத்துத் தந்தவர்,
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்
லிங்கன். அத்தகைய
மக்களுக்கான அரசை
இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா
முழு சுதந்திரம் பெற்ற
நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக்
கருதி உருவாக்கப்பட்டது தான்
இந்திய அரசியல்
அமைப்புச் சட்டம்.

 PDF
 PDF 
No comments:
Post a Comment